Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

மொபைல் இணைப்பு தொடர்பான விதிகளை மாற்றிய அரசு !!

 


வெளிநாட்டு குடிமக்களுக்கான மொபைல் எண்களில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. இதற்க்கு முன்பு, வெளிநாட்டு குடிமக்கள் இந்திய எண்களைப் பெறுவதில் மிகவும் சிரமப்பட்டனர், ஆனால் தற்போது மத்திய அரசாங்கம் இந்த செயல்முறையை எளிதாக்கியுள்ளது. வெளிநாட்டு குடிமக்கள் மொபைல் எண்களைப் பெறுவதற்கு OTP இல் சிக்கல் இருந்தது. இப்போது OTP ஐ மின்னஞ்சல் மூலம் நேரடியாகப் பெறலாம். அரசாங்கம் இந்த முடிவை கடந்த ஜூலை 31 ஆம் தேதி அன்று எடுத்தது.

கைபேசி எண்களுக்காக அரசு செய்துள்ள மாற்றங்கள் இந்திய பயனர்களை பாதிக்காது. வெளிநாட்டு குடிமக்கள் இந்திய எண்களைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்கும் வகையில் இந்த விதி கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது எண்ணுக்கு OTP கொடுக்க வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. மின்னஞ்சல் மூலம் எளிதாகப் பயன்படுத்தலாம்.



மொபைல் எண்கள் தொடர்பான விதிகளை அரசு தொடர்ந்து மாற்றுகிறது. முன்னதாக, உள்ளூர் குடிமக்கள் மொபைல் எண்களைப் பெறுவதற்கான விதிகளை அரசாங்கம் மாற்றியது. இதில், பயனர்களுக்கு மொபைல் எண்ணுடன் EKYC கட்டாயமாக்கப்பட்டது. அதிகரித்து வரும் இணைய மோசடிகளை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில், பயனர்களின் முகவரி தெரியவில்லை. அவர்களின் பெயரில் சிம் பெறப்பட்டது. இதனால் பயனர்கள் சிம்மிற்கு EKYC செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.


Post a Comment

0 Comments

Ad Code